காணாமல் போன 11 மாத குழந்தையை தேடும் பணியை அமெரிக்கப் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்
Published on October 20, 2011-5:55 pm · No Comments
அமெரிக்காவில் காணாமல் போன 11 மாத குழந்தையை அந்நாட்டு அதிரடிப்படை வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவின் முசோரி மாநிலம் கன்சாஸ் நகரை சேர்ந்தவர் ஜெர்மி இர்வின் மற்றும் பிராட்லி தம்பதியினரின் 11 மாத குழந்தை லிசா இர்வின்.
இக்குழந்தையை அக்டோபர் 4ம் திகதி இரவு படுக்கை அறையில் தூங்கிக்கொண்டு இருந்த லிசாவை காணவில்லை. தற்போது லிசாவை தேடும் பணியில் பொலிசார் மட்டுமல்லாமல் அமெரிக்க அதிரடி படையினரும் ஈடுபட்டுள்ளனர். அம்மாநில கவர்னரே இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
அக்டோபர் 15ம் திகதி ஜெர்மி இர்வினின் வீட்டு அருகே இருக்கும் ஆள் இல்லாத வீட்டில் தேடினர். அங்கு குழந்தைகள் அணியும் சில உடைகள், பேபி நாப்கின் போன்றவை இருந்தன. இதையடுத்து பொலிசாருக்கு குழந்தை கடத்தலில் சில தடயங்கள் கிடைத்தன.
உள்ளூர் திருடர்கள் இந்த கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிசார் விசாரிக்கின்றனர். சந்தேகத்தின் பேரில் ஜெர்சி என்ற திருடன் விசாரிக்கப்பட்டான். ஆனால் அவன் மீது முழுமையாக சந்தேகம் எழவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே குழந்தை பற்றி தகவல் தருவோருக்கு 5 கோடி ரூபாய் பரிசு தரப்படும் என அறிவிக்கப்பட்டது. எப்.பி.ஐ எனப்படும் சிறப்பு புலனாய்வு அதிகாரிகளும் குழந்தையை தேடுகின்றனர்.
குழந்தை பற்றி ஏற்கனவே எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை தொலைக்காட்சி, இணையதளம் மற்றும் நாளிதழ்களில் வெளியிட்டுள்ளனர்.
Related posts:
- காணாமல் போன சுவீடன் பெண் காலி காவல்நிலையத்தில்!
- தண்ணீர் தொட்டியில் வீழ்ந்து ஒருவயது குழந்தை பலி!
- ஈழத்தமிழர் அகதி முகாமில் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்- 700 அகதிகள் உண்ணாவிரதம்!
- போர்க்குற்றத்திலிருந்து தப்ப சிறிலங்கா தேடும் பதுங்கு குழி!
- ஈராக்கில் அமெரிக்கப் படைகள் நீடிப்பு
செய்திகள்
மாடு வெட்டுவதை கண்டித்து இன்று கண்டி தலதா மாளிகைக்கு அருகில் ...
வைகாசி விசாக பூரணை தினத்தில் காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ...
பௌத்த மதத்தை பெரும்பான்மையாக கொண்ட இலங்கையில் முஸ்லீம்கள் மாடுகளை வெட்டுவதை ...
மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்கக் கூடாது என பாதுகாப்புச் செயலாளர் ...
தேசியப்பாதுகாப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்புடன் எவ்விதமான இணக்கங்களையும் ஏற்படுத்தி ...
அம்பாறை, திருக்கோவில் மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் இன்று (24) காலை ...
இலங்கையர்களை சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்கு அனுப்பி வைக்கும் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த 18 ...
'சிவசக்தி ஆனந்தனை நேற்று விசாரணை செய்தீர்கள். நாளைக்கு என்னையும் நான்காம் ...
பிரபாகரனுடன் என்னை ஒப்பிடவேண்டாம். பச்சைப் பொய்களைக் கூறி தமிழ், முஸ்லிம், ...
லண்டனில் நேற்று முஸ்லீம் பயங்கரவாதிகளால் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதை ...