Friday, May 24th, 2013

பாணை உண்ணாதே- கொக்கோகோலாவை குடிக்காதே- சிங்கள அமைப்புக்கள் எச்சரிக்கை!

Published on March 23, 2012-5:31 pm   ·   4 Comments

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டுவந்துள்ள அமெரிக்காவின் உற்பத்திப் பொருட்களை இலங்கை மக்கள் புறக்கணிக்க வேண்டும் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. தேசப் பற்றுடைய தேசிய அமைப்பினரும் பௌத்த பிக்குகளும் கோட்டைப் புகையிரத நிலையத்திலிருந்து புறக்கோட்டை போதிராஜ விகாரை வரை ஊர்வலமாக சென்று பிரசாரங்களை மேற்கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய தேசப் பற்றுடைய தேசிய அமைப்பின் செயலாளர், இலங்கை மீது அமெரிக்கா தனது ஆதிக்கத்தைச் செலுத்தப் பார்க்கிறது என்று கூறினார்.

ஐ.நா.மனித உரிமை பேரவை தீர்மானம் நிறைவேறியிருந்தாலும் அதன் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்த இலங்கை அரசாங்கம் அனுமதி அளிக்ககூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார். அமெரிக்காவுக்கு பலத்த எதிர்ப்பை தெரிவிப்பதன் மூலமே அதன் ஆதிக்க முயற்சியைத் தோற்கடிக்க முடியும். ஆகவே அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களை இலங்கை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

கொக்ககோலா, கோதுமை மா உட்பட எது எது அமெரிக்க உற்பத்திப் பொருட்கள் என மக்களுக்குத் தெரிவிக்கும் துண்டுப் பிரசுரங்களும் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது விநியோகிக்கப்பட்டன.

Related posts:

  1. அரசியல் தெரியாத பீரிஸிடம் ஐ.நா.விவகாரத்தை ஒப்படைக்க வேண்டாம்- சிங்கள அமைப்பு கோரிக்கை!
  2. சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக சிங்கள அமைப்புக்கள் நட்டஈடு கோரி வழக்கு!
  3. சர்வதேச அழுத்தங்களுக்கு எதிராக சிங்கள அமைப்புக்கள் எதிர்ப்பு போராட்டம் நடத்த திட்டம்!
  4. சர்வதேச சட்டங்களை சிறிலங்கா புறக்கணிக்க முடியாது- தமிழர் அமைப்புக்கள் நம்பிக்கை!
  5. எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்காவின் எச்சரிக்கை – அடங்கிப்போனது சிறிலங்கா!

Readers Comments (4)

  1. இதயச்சந்திரன் says:

    கவலைப்பட வேண்டாம் சிங்கள சகோதரர்களே., சிறிமாவோ காலத்தில், ‘காட்ட’ வோடு [வெறும் தேத்தண்ணி], ‘ஹக்குறு’ வை [சக்கரை ] நக்கிக் குடித்த பரிதாப நிலையை, மீண்டும் கொண்டுவரப்போகிறார் உங்கள் மகிந்த மன்னர். நீங்கள் கொக்காகோலாவை புறக்கணித்தால், அமெரிக்காவிற்கு ஒரு மயிர் உதிர்ந்த மாதிரி. முதலில் நாட்டில் இருக்கும் நூற்றுக்கணக்கான சூதாட்ட விடுதிகளை [கசினோ] பூட்டுங்கள். விலைவாசி ஏற்றத்திற்கு எதிராகப் போராடுங்கள்

  2. mpillai says:

    இந்தச்சிங்கள மக்களுக்கு இருக்கின்ற உணர்வு உங்களைப்போன்றவர்களுக்கு இல்லையே முதலில் உங்கள் தமிழ்மக்களுக்கு சொல்லுங்கோ இதயச்சந்திரன் நீங்கள் உங்களை ஆய்வாளராகக்காட்டிக்கொண்டு கருத்துக்கள் சொல்கின்றீர்கள் ஆனால் தமிழர்களை சிங்களதேசத்துப்பொருட்களை வாங்கவேண்டாம் என்று சொல்லவக்கில்லையே என்னே ஆய்வாளர் நீங்கள் உங்களுக்கே சிங்களவருடைய களிவு நீரில் வளரும் பொன்னாங்காணியும் வல்லாரையும் இல்லாட்டில் பத்தியப்படாது will you say to your tamils to boycut sri lanka products you cant முதலில் தமிழர்க்குத்தேவை சிங்களத்தயாரிப்பான கட்டச்சம்பொல் எம் டி தயாரிப்புக்கள் ஸ்ரவுட் லயின்லாகர்.மாசுக்கருவாடு.உயிர்மீன்.போங்கய்யா னீங்களும் ஒரு ஆய்வாளர்.

  3. Hary Nathan says:

    Hello Bhudda Pikkus,

    Do your work at Bhudda Temple not on the Street. If you are on the street means you are gangers. So please change your name as a “Moddai Gangers” with yellow dress.

  4. இதயச்சந்திரன் says:

    பிள்ளை, நான் சொல்ல வந்த விடயம் உங்களுக்கு புரியவில்லை. கழிவு நீரில் மட்டும் , கீரைகள் வளரும் என்று கூறும் உங்கள் அறிவு போற்றத்தக்கது. நீங்கள் என்னை ஆய்வாளர் என்று சொன்னால் நான் என்ன செய்வது?.வந்த செய்திக்கு எனது கருத்தை பகிர்ந்து கொண்டேன். எனது கருத்திற்கு பதில் சொல்வதை விடுத்து, செய்தி குறித்த உங்கள் கருத்தை எழுதுங்கள். அதை வாங்கு..இதை வாங்க வேண்டாம் என்று சொல்வதற்கு நான் என்ன மேர்வின் சில்வா போன்ற அரசியல்வாதியா?.புலம்பெயர் மக்களுக்கு நீங்களே சொல்லுங்கள்,

Comments are closed.

செய்திகள்

gow cut

முஸ்லீம்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் மாடு வெட்டுக்கிறார்கள் [May 24, 2013]

மாடு வெட்டுவதை கண்டித்து இன்று கண்டி தலதா மாளிகைக்கு அருகில் ...
TODAY4

வைகாசி விசாக பூரணை தினத்தில் காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் வைகாசி சடங்கு [May 24, 2013]

வைகாசி விசாக பூரணை தினத்தில் காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ...
bikku

முஸ்லீம்கள் மாடுவெட்டுவதை கண்டித்து தலதாமாளிகைக்கு அருகில் புத்தபிக்கு தீக்குளிப்பு [May 24, 2013]

பௌத்த மதத்தை பெரும்பான்மையாக கொண்ட இலங்கையில் முஸ்லீம்கள் மாடுகளை வெட்டுவதை ...
kotta

மாகாணசபைக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க மாட்டேன்- கோத்தா அகங்காரம் [May 24, 2013]

மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்கக் கூடாது என பாதுகாப்புச் செயலாளர் ...
valikamam north 1

காணி சுவீகரிப்பு பற்றி ஐ.நா. கேள்வி கேட்க கூடாது என பாதுகாப்பு செயலாளர் கூறுகிறார் [May 24, 2013]

தேசியப்பாதுகாப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்புடன் எவ்விதமான இணக்கங்களையும் ஏற்படுத்தி ...
pillaiyar

மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் கடலை உட்கொண்ட 33 பேர் வைத்தியசாலையில் [May 24, 2013]

அம்பாறை, திருக்கோவில் மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் இன்று (24) காலை ...
british flag

இலங்கையர்களை இங்கிலாந்துக்கு கடத்தும் 18 பேர் கைது [May 23, 2013]

இலங்கையர்களை சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்கு அனுப்பி வைக்கும் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த 18 ...
samban (1)

நேற்று சிவசக்திக்கு ஆனந்தனுக்கு நாளை எனக்கா? – நான்காம் மாடி விசாரணை குறித்து சம்பந்தன் [May 23, 2013]

'சிவசக்தி ஆனந்தனை நேற்று விசாரணை செய்தீர்கள். நாளைக்கு என்னையும் நான்காம் ...
Rayappu Joseph, Bishop of Mannar

‘பிரபாகரனுடன் என்னை ஒப்பிடவேண்டாம். – நான் சமாதானத்தை விரும்புபவன் -மன்னார் ஆயர் [May 23, 2013]

பிரபாகரனுடன் என்னை ஒப்பிடவேண்டாம். பச்சைப் பொய்களைக் கூறி தமிழ், முஸ்லிம், ...
woolwich_knif

முஸ்லீம் பயங்கரவாதிகளின் தாக்குதலை அடுத்து டேவிட் கமரோன் நெருக்கடி குழுவை கூட்டியுள்ளார் [May 23, 2013]

லண்டனில் நேற்று முஸ்லீம் பயங்கரவாதிகளால் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதை ...